இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Thursday, December 6, 2007

அப்பா

தடுமாறும் நடை
தொலையாத தூக்குச்சட்டி
மிட்டாய்களும்
காரசேவு பொட்டலமும்
இல்லாத கை
சிரிக்காத முகம்

ஆங்...
அங்கே வருவது
அப்பாதான்

இன்று அவர் குடிக்கவில்லை.

1 comment:

மா.கலை அரசன் said...

நிறைய கிராமத்து அப்பாக்கள் இன்றளவும் இப்படியே இருப்பது தான் வேதனையாக இருக்கின்றது.



http://kalaiarasan.wordpress.com/