மவுனம் உறைந்து போகும்
கருப்பு வெயில் நேரத்தில்
மிடறுவிழுங்காத
தொண்டையிலிருந்து
எழுகிறதென்
ஆழ்மன இரைச்சல்
கைகளில் கால்களும்
கால்களில் கைகளுமாக
கோரமாயிருக்கிற உடலில்
மந்திரமூர்த்தியும்
சுடலைமாடனும்
வேண்டி செல்கிறார்கள்
ஆயுதம் சுமக்காத
சிலையாக இருக்கிறேன்
அரிவாள் திணித்துப்
போகிறார்கள் பக்தர்கள்
என்பெயரில் நடக்கத்
தொடங்கும் பலிகளில்
ஆறாவது அறிவை
தேடிச் சலிக்கிறேன்
தொலைந்து போகாத
ஐந்தறிவோடு.
இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Hai,
Its nice.
இன்னும் பல இது போல் எழுதவும்.
Post a Comment