இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Saturday, November 24, 2007

இரைச்சல்

மவுனம் உறைந்து போகும்

கருப்பு வெயில் நேரத்தில்
மிடறுவிழுங்காத
தொண்டையிலிருந்து
எழுகிறதென்
ஆழ்மன இரைச்சல்

கைகளில் கால்களும்
கால்களில் கைகளுமாக
கோரமாயிருக்கிற உடலில்
மந்திரமூர்த்தியும்
சுடலைமாடனும்
வேண்டி செல்கிறார்கள்

ஆயுதம் சுமக்காத
சிலையாக இருக்கிறேன்
அரிவாள் திணித்துப்
போகிறார்கள் பக்தர்கள்

என்பெயரில் நடக்கத்
தொடங்கும் பலிகளில்
ஆறாவது அறிவை
தேடிச் சலிக்கிறேன்
தொலைந்து போகாத
ஐந்தறிவோடு.

2 comments:

successgopala said...

Hai,
Its nice.

குசும்பன் said...

இன்னும் பல இது போல் எழுதவும்.